1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
2. செவிக்குணவு இல்லாதபோழ்து சிறிது
வயிற்றுக்கு ஈயப் படும்.
3. செவி யுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.
6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
9. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
10. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment