1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
3. நவில் தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
6. முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது நட்பு.
7. அழிவினை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழைப்பதாம் நட்பு.
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
10. இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
மேலும் பல :
இலக்கியம் நான் மணிக்கக்கடிகை
பழ மொழி நானூரு முதுமொழிகாஞ்சி
ஏலாதி & சிறுபஞ்சமூலம்
திருக்குறள் அதிகாரங்கள் :
திருக்குறள் -- அன்புடைமை
திருக்குறள் -- பண்புடைமை
திருக்குறள் -- கல்வி
திருக்குறள் -- இனியவை கூறல்
திருக்குறள் -- வினைத்திட்பம்
திருக்குறள் -- பொருள்செயல்வகை
திருக்குறள் -- பெரியரைத் துணைக்கோடல்
திருக்குறள் - சான்றாண்மை
திருக்குறள் - செய்நன்றி
திருக்குறள் - ஒப்புரவறிதல்
திருக்குறள் - வலி அறிதல்
திருக்குறள் - காலமறிதல்
திருக்குறள் - வாய்மை
திருக்குறள் - நட்பு
திருக்குறள் - பொறையுடைமை
திருக்குறள் - ஒழுக்கமுடைமை
திருக்குறள் - அடக்கமுடைமை
திருக்குறள் - அறிவுடைமை
திருக்குறள் - கேள்வி
திருக்குறள் -- கல்வி
No comments:
Post a Comment